ரகசிய ஓலங்கள்
தேனீர்க்கோப்பைகள்
சுமந்துசென்றேன்_உன்
முத்தம் சுமந்த
கைகளால்த்தான்
முதல் சந்திப்பில்
உன்னிடத்தில்
சிந்திய வெட்கம்_இன்று
வந்திருக்கவே இல்லை
குறைந்தபட்சமாய்
இரண்டு பெண்மைகளின்
அழுகை மறைந்திருந்தது!
தேனீருக்காகவும்
இன்னும் சிலவற்றுக்கான
அவன் புன்னகையில்
தாமதித்திருந்தால்
கண்ணீர் துளி
தரையில் மோதுமென
அறைக்குள் நகர்ந்தபோதே!
"பொண்ண பிடிச்சிருக்கு
எப்ப கல்யாணத்த
வச்சுக்கலாம்"
பாதி எரிந்த
பூங்காவில்
மீதமிருக்கும்
மொட்டுக்களுக்கு
அறுவைச்சிகிச்சை
செய்து பூக்கள்
பெறப்போகிறார்களா?
ரகசிய கண்ணீர்
தோய்ந்த_என்
கைக்குட்டையின்
உப்புவாடை_உன்
நந்தவனக்கதவில்
நசுங்கி சாகுமா
பூக்களின் வாசத்தில்
புணர்ந்து போகாது
என் நிலை உன்னிடம்
உணர்த்துமா
காதலா!