கண்ணுக்குள் மை

எழுதிக் கொண்டிருந்த
பேனா மையுமிழ்வை
மறந்து நகர...
நா வறட்சி
இரண்டு சொட்டுக்கள் கடன் வாங்கி
எழுதி முடிக்க
அன்றைய தாகம்
தணிந்தது.
அடுத்த நாள்
அண்ணாச்சி கடையில்
பத்து பைசாவுக்கு
மை அடைத்துக் கொண்டு
பள்ளிக்கூடம் வந்து
கடனைத் திருப்பிக் கொடுக்கத்
தேடுகையில்...
மயிலி சொல்லிக்கொண்டிருந்தாள்
அருகாமைத் தோழியிடம்
ராசாத்தி பட்டணத்துக்கு படிக்கப் போயிருச்சாம் ....
திருப்பிக் கொடுக்காமலேயே
தேங்கிக் கிடக்கிறது
இமைகளுக்குள்
இன்னும் அந்த இரண்டு சொட்டுக்கள் ...

எழுதியவர் : மீ.மணிகண்டன் (3-Nov-15, 11:34 am)
Tanglish : kannukkul mai
பார்வை : 206

மேலே