இதுதான் தீர்ப்பு

ப்ளிச்.... பளிச்.....

காமிராக்கள் கண் சிமிட்ட
பத்திரிக்கையாளர்கள்
கூட்டம் ஈ போல
மொய்க்க கையைத் தூக்கி
பெரிய கும்பிடுடன் சிரித்தபடி
கோர்ட்டிலிருந்து வெளி வந்தார் சாமியப்பன்.....

தலைவர் சாமியப்பன்
வாழ்க.... வாழ்க....

அன்பு அண்ணன்
சாமியப்பன்
வாழ்க... வாழ்க....

தொண்டர்கள் கோஷம்
வானை முட்ட,,,,
மலர் மாலைகள்
கழுத்து கொள்ளாது
குவிய,,,
பட்டாசு வாலாக்கல்
வெடித்து தெறிக்க,,,

அமர்த்தலாக பத்திரிக்கையாளர்கள்
முன் அமர்ந்தார்
சாமியப்பன்...

தங்கள் மீது போடப்பட்ட
வழக்கு..?

அத்தனையும் பொய் வழக்குகள்
என்னையும் எனது
கட்சியையும் கண்டு பயந்த
எதிர்கட்சிகளின் கூட்டுச்
சதி,,, நீதிமன்றங்களின்
மேல் எனக்கு இன்னும்
நம்பிக்கை இருக்கிறது நீதி
சாகவில்லை என்பது
எனக்கு வழங்கப்பட்ட
தீர்ப்பின் மூலம் நிருபணம்
ஆகியுள்ளது....

இந்த தீர்ப்பின் மூலம்
மக்கள் மத்தியில் உங்கள்
செல்வாக்கு கூடியுள்ளதாக
கருதுகிரீர்களா ..?

நிச்சயமாக,,,
உண்மை எதுவென்று
மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்
அதனாலே மக்கள்
மத்தியில் எனது
செல்வாக்கு கூடியுள்ளது...
வரும் தேர்தலிலும்
அது எதிரொலிக்கும்....

வரும் தேர்தலில் முதலமைச்சர்
பதவிக்கு போட்டியிடுவீர்களா...???

கண்டிப்பாக...

சொல்லி விட்டே
எழுந்தார் ...

தலைவர் சாமியப்பன்
வாழ்க.... வாழ்க.....

வருங்கால முதலமைச்சர்
சாமியப்பன்
வாழ்க.... வாழ்க....


கோஷங்களுக்கிடையே காரில்
ஏறி அமர்ந்தார்...


ஹா....ஹா....ஹா....

பயங்கரமாக சிரித்தார்
சாமியப்பன்...

முட்டாள் ஜனங்க,,,
முட்டாள் நீதிமன்றம் .,,
முட்டாள்கள் நிறஞ்ச
நாடு...
ஹா...ஹா....ஹா..

தலைவரே இப்படியே
போனா நீங்க
தான் அடுத்த சி.எம்.....
சாமியப்பனின் பி.ஏ முருகன்...

இப்பவே நா சி.எம்
மாதிரி தான்டா..
ஜனங்க முட்டாளா இருக்குற
வர எல்லாமே சுலபம்டா..
சரி...சரி.
ஜட்ஜ்-க்கு சேர வேண்டிய
பணம் உண்மையை திரிச்சு
எழுத மீடியாகாரனுக்கெல்லாம்
சரியா
கொடுத்தியா....??

அதெல்லாம் சரியா
கொடுத்துட்டேன் தலைவரே
காசு தான் கோடிகணக்கா
செலவாயிடுச்சு...

ஹா...ஹா....
அடுத்த சி.எம்
நாந்தானே இந்த
ஏமாளி ஜனங்க
எதுக்கு இருக்காங்க
அவங்க கிட்டையே
கொள்ளை அடிச்சுரலாம்..

தனது பி.ஏ-வுடன்
பேசிக் கொண்டிருக்கையில் தான்
கவனித்தார்.'
கார் வேகமாக சென்று
கொண்டிருப்பதை,,,,,

யேய்,,, யேய்,,,,
டிரைவர் ஏன்
இவ்வளவு வேகமா
போற...?
மெதுவா போ...


பின் திரும்பி பார்த்த
டிரைவர்...,,,

வண்டி வேகமா தான்
போகுது நீயும்
வேகமா தான் போக
போற....
உன்னை மாதிரி அரசியல்வாதி
இருக்குறதால தான்
நாடு இவ்வளவு கேவலமான
பாதைல போயிட்டு
இருக்கு......
பணத்தால அநியாயத்த
நியாயமா மாத்த
உன்னால முடியுது.....
மக்கள் மத்தில
ஒரு ஹீரோ - வா
காட்டிக்க முடியுது...

ஒருவேள சாப்பாட்டுக்கே
வழி இல்லாம நடுத்தெரு - ல
நாட்டு ஜனங்க இருக்குறப்போ
அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்குற
பணத்துல வரி - ங்கற
பேர்ல பிடித்தம் பண்ணி
உங்கள மாதிரி அரசியல்வாதிங்க
சொகுசா வாழ்ந்து
அப்பாவி ஜனங்களுக்கு
எதுவுமே கிடைக்காம
பண்ணுற உன்ன மாதிரி ஆட்கள்
உயிரோட இருக்கிறதே
தப்பு....
கோர்ட் என்னடா உங்களுக்கு
தீர்ப்பு சொல்றது இதோ
நான் சொல்றேன்டா
தீர்ப்பு....
சொல்லியபடியே
ஆக்ஸ்லேண்டரை முழு
வேகத்தில் மிதிக்க
கார் அசுர
வேகத்தில் எதிரில்
"பாம்" என்று
அலறிக் கொண்டு வரும்
லாரியை நோக்கி
போக..........


டமார்..

,பெருத்த ஒசை எழுந்து
அடங்கியது...

மறுநாள்

அமைச்சர் சாமியப்பன்
தனது பி.ஏ மற்றும்
டிரைவருடன் வாகன
விபத்தில் பலி......

எழுதியவர் : கவிஞன் அருள் (5-Nov-15, 7:35 pm)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : ithuthaan theerppu
பார்வை : 255

மேலே