அன்னையே உனக்காக

..."" அன்னையே உனக்காக ""...

பல திங்கள் வயிர் சுமந்து
பத்தியங்கள் பலவிருந்து
பத்திரமாய் பெற்றெடுத்து
பாதுகாத்த என் தாயவளே ,,,

நிலாவைத் தான்காட்டி
நித்தமும் சோறூட்டி
செந்தமிழ் சொல்லாலே
தேனமுது பாட்டிசைத்து ,,,

எந்நாளும் எழுச்சியோடு
எட்டுத்திக்கும் வாழ்வதற்கு
எடேடுத்தும் படிக்காத
என்னன்னை நீ சொன்னாய் ,,,

தொட்டிலில் உறங்கையிலும்
தொட்டுப்பார்த்து தடவிவிட்டு
விட்டிப்போகா உறவென்று
விளக்கவுரை தந்தவளே ,,,

உன் பாசக் கரங்கள் நீட்டி
உள்ளத்தில் சேர்த்தணைத்து
வாஞ்சையோடு முத்தமிட்டு
வாழும் வழி சொன்னவளே ,,,

கண்களில் நீர் பெருக
கவிதையும் தானுருக
கருணையில் சிறந்தவளே
கடவுள் தந்த பெரும்பொருளே ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன் .

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் . (8-Nov-15, 10:21 am)
Tanglish : annaiyae unakaaga
பார்வை : 564

மேலே