போற்றுவோம்

கண்ணில் மண்ணும் ...
காலில் முள்ளும் ...
கண்டபடி பட்டாலும்
உன்னையும் என்னையும்
கண்மணி போல
பார்த்து கொண்டவள்
உன்னை காண துடிக்கிறாள்
இப்போதும் ...

மறந்து விடாதே ..
மறுத்து விட்ட
உன் கைகளினால்
மரத்து போவது
உன் இதயம் மட்டுமல்ல
உன் வாழ்க்கையையும் தான் ...

தொழில் செயிது
தோளில் சுமந்து
உயிர் ஆக்கின
உன் அப்பாவைத்தான்
உதாசீன படுத்தியது
உலகம் பார்த்ததே ...
வஞ்ச உலகம் இது
கொஞ்சும் காலம் அது ..
உன்னோடு இருப்பவர்கள்
எல்லோரும் இனிப்பவர்கள்தான்
அது எல்லாம் உன் கைகளில்
இருக்கும் வரைதான்
உணர்ந்து கொள்
தன்னை விட
தன் மகன் / மகள் - க்காக
வாழும் தன்னிகர் இல்லா
நம் தாய் தந்தையை
போற்றுவோம் ....

எழுதியவர் : - நெல்லை பாரதி . (7-Jun-11, 8:15 pm)
பார்வை : 247

மேலே