அடைமழை
சென்னை நகர மக்கள்
பெருமழையை
யாசித்துக்கொண்டிருக்க
வரும் மழையோ
யோசித்து யோசித்துப்
பெய்து கொண்டிருக்கிறது!
சிறுதுளி பெருவெள்ளம்
என நினைந்தோ
துளித்துளியாய்த்
தூறிக்கொண்டிருக்கின்றன
ஐப்பசி மேகங்கள்!
வெள்ளமே வந்தாலும்
துளியாய்த் தான்
கணக்கில் கொள்ளும் வகையில்
வறண்டு கிடக்கின்றது
எங்கள் நிலம்!
மடைகள் நிரம்ப
இடைவிடாது பொழிந்து
காட்டிடுவாய்
ஐப்பசிமாதமே
உந்தன் பலம்!