பொன்மொழிகள்2
• ஒருநாள் கவலை. ஒருநாள் மகிழ்ச்சியை விட நீளமானது. - சீனா.
.
• உண்மை செருப்பணிந்து புறப்படுவதற்குள் பொய் உலகையே சுற்றிவிடுகிறது. - இங்கிலாந்து
.
• உனக்கு பகைவன் வேண்டுமா? அப்படியானால் ஒருவனுக்கு கடன் கொடுத்து திருப்பிக் கேள். - பிரான்ஸ்
• இனிமையாகப் பேசினால் கெட்ட சரக்கும் விற்றுப் போகும். - ஜெர்மனி.
• வல்லவன் மணலிலும் பம்பரம் விடுவான். - ஜப்பான். . • செத்துக் கிடக்கும் சிங்கத்தை விட உயிருள்ள சுண்டெலி மேலானது. - ரஷ்யா.
* எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழுக்கான ஆசை எப்போதும் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
* அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.
* அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டிற்கும் நெருக்கம் அதிகம்.
* குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்.
முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.
* மகிழ்ச்சி,மிதமான உணவு,போதிய ஓய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா.