விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

* நேர்மையுடன் உழைத்தால் அதற்குரிய பரிசாக நீ முன்னேற்றத்தை அடைவாய்.

* கீழ்ப்படிதலை அறிந்தவனுக்கே கட்டளையிடும் அதிகாரம் உண்டு.

* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கு இருப்பது அவசியம்.

* தன்னை அடக்கப் பழகியவன் வெளியுலகில் எதற்கும் வசப்படத் தேவையிருக்காது.

* மனதில் வெறுப்புக்கு இடம் அளித்து விடாதே. வெறுப்பு கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.

* எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறும் ஆற்றல் உனக்கு இருக்கிறது.

- விவேகானந்தர்

எழுதியவர் : செல்வமணி (9-Nov-15, 8:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 384

மேலே