ஒப்புகொள்வதே சிறப்பு

ஒப்புகொள்வதே சிறப்பு

தெரியாததை தெரியாது ....
ஒப்புகொள்வதே சிறப்பு ...
தெரியாததை தெரிந்ததுபோல் ....
வேஷம் போடுவதே -பெரும்
அறியாமை ....!!!

அறியாத நூல்களை ....
அறிந்ததை போல் பேசுவது ....
அறிந்தவர்களுக்கே ....
அறியாமையை ஏற்படுத்துவார் ...!!!

+
குறள் 845
+
புல்லறிவாண்மை
+
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 65

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Nov-15, 11:18 am)
பார்வை : 309

மேலே