ஒப்புகொள்வதே சிறப்பு
ஒப்புகொள்வதே சிறப்பு
தெரியாததை தெரியாது ....
ஒப்புகொள்வதே சிறப்பு ...
தெரியாததை தெரிந்ததுபோல் ....
வேஷம் போடுவதே -பெரும்
அறியாமை ....!!!
அறியாத நூல்களை ....
அறிந்ததை போல் பேசுவது ....
அறிந்தவர்களுக்கே ....
அறியாமையை ஏற்படுத்துவார் ...!!!
+
குறள் 845
+
புல்லறிவாண்மை
+
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 65