ஒரு தேவதை சிரிக்கின்றாள்

ஒரு தேவதை சிரிக்கின்றாள்
பூவிதழ் விரிக்கின்றாள்
புன்னகையில் மலர்கின்றாள் !

தென்றல் குழம்பி நிற்கிறது
பூவுக்கும் பூவிதழுக்குமிடையில் !
தேவதை சிரிக்கின்றாள் !

கூந்தலோடு மிதந்து
தேனிதழைத் தடவுகிறது
இதுதான் மலரோ மலரோ என்று ...
தேவதை சிரிக்கின்றாள் !

ஐயத்தில் விலகி மலரிடம் சென்று
மீண்டும் திரும்புகிறது
மலர் மண்ணில் உதிர்கிறது
புன்னகைப் பூவுடன் தென்றல் நடக்கிறது !
தேவதை சிரிக்கின்றாள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-15, 10:09 pm)
பார்வை : 90

மேலே