முடியாத கவியாய் நீ

நான் ரசிக்கும் கனவாக
நீ வந்து போனாய்
நான் மயங்கும் இசையாக
நீ எங்கும் ஒலித்தாய்...

தொலை வானின் நிலவாக
தொடர்ந்தெங்கும் வந்தாய்
தொலைத்தேனே இதயம் உன்னில்
தொலைவாகி போனாய்...

அறிந்தே நான் தொலைந்தேன்
அவனெனும் அழகிய தீவில்
அழியாது அவனின் விம்பம்
அனல் கொண்டு எறியும் போதும்...

அவன் பெயரை மட்டும் கொண்டே
அழகான கவிதை உரைப்பேன்
அரிவாளின் கூர்மை கொண்டே
அவன் விழிகள் என்னை வீழ்த்தும்...

மீளாமல் என்னுள் உன்னை
புதைத்தே விட்டேன்,
வேரூன்றி என்னுள் நீயும்
தழைத்தே விட்டாய்...

முடியாத கவியாய் என்னை
நீயும் தொடர்வாய்
வான் மேகம் வாழும் காலம்
என்னுள் நீயும் வாழ்வாய்...

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (26-Nov-15, 10:21 pm)
பார்வை : 755

மேலே