ஒரு சந்தேகம்

பொட்டால் காடாய் கிடந்தது தான் நம்ம ஊரு... இப்பப்பாருங்க வெள்ளம் வந்து தண்ணிக்காடாப் போச்சு....
காய்ச்சுபோன கம்மாயெல்லாம் நெறச்சு போச்சு..... தண்ணி பாயாத வாய்க்காலெல்லாம் குளிர்ந்து போச்சு.... சுணைத்தண்ணியெல்லாம் நல்லாவே தெளிஞ்சுப்போச்சு.... ஆனா என்ன... நம்ம வீடெல்லாம் இந்த மழையால அழிஞ்சு போச்சு..... நாதியத்து நாம நிக்கறோம்.... ஏதோ குழு வருதுன்னு சொன்னாங்களே... அவங்க நமக்கு ஏதாவது கொடுக்க வர்றாங்களா... இல்ல நாம கட்டியிருக்கற கடைசி துணியையும் உருவ வர்றாங்களா.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Nov-15, 9:04 am)
Tanglish : oru santhegam
பார்வை : 337

மேலே