அவள் என்பது - கற்குவேல் பா

வெள்ளம் ஓடிய
தெருக்களில்
எஞ்சி நிற்கும்
சகதிகளின் நடுவே
புதைந்து கிடக்கும் - உன்
பாதச் சுவடுகள்
கொஞ்சமேனும் - எனக்கு
காணக்
கிடைக்குமெனில் ,
எதைப் பற்றியும்
கவலை கொள்ளாமல்
சட்டென
எழுதி விடுகிறேன் ,
" மழை நல்லது " என்று !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (10-Dec-15, 12:50 pm)
பார்வை : 87

மேலே