நீ பார்த்த அந்த ஒரு பார்வை ஏனடி 555
பாவையே...
உன்னிடம் நான் காதலை
கேட்கவில்லை...
தெரியும் அது உன்னிடம்
கிடைக்காது என்று...
பிறகெதற்கு நான் உன் விழிகளை
கேட்டு கொண்டு இருக்கிறேன்...
தெரிந்தோ தெரியாமலோ
நீ என்னை பார்த்திருக்கிறாய்...
அதை என் மனம் முதலில்
பார்த்திருக்கிறது அவ்வளவுதான்...
நீ பார்த்த பார்வையை
திருப்பி கொடுத்துவிடு...
என் உயிரே முடிந்தால்
நான் பறிகொடுத்த இதயத்தையும்.....