இயற்கையின் காலம்

காலம் புரியவைக்கிறது...
என் மக்கள் மனம் அறியுமோ...
நடிகருக்கு சண்டைப்போடும் வயதினர்...
வளமான நாட்டிற்கு குரல் தரவில்லையே..
குரல் நெறி நெறிக்கிறது என் மழையன்னை...
இலவசம் தருகிறோம் என்றதும்...
வகைதெரியாமல் வாக்களித்த என் ஜனத்திற்கு...
இயற்கையன்னை தரும் இலவசம் வாங்க விரும்பலையே...
கோடிகளை சுருட்டிய கட்சியெல்லாம் தோரணையாய் ரசித்திட...
கோடிகளில் கட்டிய வீடும் இயற்கையில் மூழ்கிட...
விவசாயத்தையே ஏளனமாய் பார்த்த ஊருக்கு...
உணவின் அருமையை உணர்த்திடவோ உருவெடுத்த வெள்ளாறோ...
ஊழலில் கட்டிய பாதையெல்லாம்...
மழைத்துளியின் பாரத்தையே தாங்கலையோ....
மதங்கள் பற்றி பேசும் மதவாதிகளின்...
மடதனத்தை அழித்து...
எம்மதமும் மனிதம் தான் உணர்த்திட மளமளவென பெய்யுதோ.
இந்த பொய்யான பூமியில...
இயற்கையை அழித்த இனமிங்கே...
இமை மூடாமல் பரிதவிக்கிறது..

எழுதியவர் : (12-Dec-15, 10:17 am)
Tanglish : iyarkaiyin kaalam
பார்வை : 63

மேலே