காப்போம் மனிதநேயம் --- தரவு கொச்சகக் கலிப்பா

மண்ணிலுள்ள உயிர்களிடம் மனிதநேயம் பதித்திடுவோம் .
கண்ணிலுள்ளக் கனிவையெல்லாம் கணப்பொழுதும் மறந்திடாது
பெண்மையினைக் கருத்தோங்கப் பெறுவதற்குப் பொறுத்தருளப்
பண்களெல்லாம் பலவனைந்து பரிந்தோம்பி வணங்கிடுவோம் .



அதனால்

நேரிசை ஆசிரியச் சுரிதகம்


மனிதம் காத்திட மனிதர் வாழ்வராம்
புனிதம் பெண்மையைப் புரிந்துக் காத்தலும்
கனிந்து நோக்கிக் கண்போல் பேணிட
இனிதாய் பண்களை இருளை மாற்றிட
வனைவோ மென்றும் வந்திடும்
மனித நேயம் மண்ணில் வாழ்க !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Dec-15, 10:26 am)
பார்வை : 204

மேலே