சந்திப்பு

அன்பே...
கண் விழித்தது முதலே
உன் நினைவை சுமக்கிறேன்,
நிழலென தொடரும்
உன் நினைவை நேசிக்கிறேன்.

கேட்கும் குரலெல்லாம்
உனதாக கேட்க,
பார்க்கும் இடமெல்லாம்
நீ மட்டும் தெரிய,
விழியோரம் நீர் கசிய,
எதிர் நோக்கி இருக்கிறேன்
நம் சந்திப்பிற்காக..!

சந்திப்புகள் இன்றியும்
சந்தோசம்...!-காரணம்
விடியல் முதல் நடுநிசிவரை,
குறுஞ்செய்தி வழி தொடரும்
நம் நெடுந்தொடர்பு..!

படிக்கும் போதும்,
நடக்கும் போதும்,
உண்ணும் போதும்,
உறங்கும் வரையும்- என
விரல்கள் வலித்தாலும்,
விழிகள் களைத்தாலும்,
உன் தொடர்பில் நான் மட்டும்
என் தொடர்பில் நீ மட்டும்
குறுஞ்செய்தியாய்..!

ஒருவேளை,
மனம் நாடும் உன் தொடர்பை
விழி நாடாமல் உறங்க எண்ணினால்,
கனவிலும் தொடர்கிறது..
நம் பிரியங்களும் பகிர்தல்களும்...!

கனவில் உன்னை நேரில் காண்பதால்,
நேரத்தை மறந்து
என்னையும் நான் மறந்து,
உறங்குகிறேன்...
விடியலையும் தாண்டி..!

முடிவில்லா கனவுகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்க மனமின்றி,
கண் விழிக்கிறேன்..
விழித்ததும் என் முதல் பிராத்தனை....
இன்றாவது உன்னை நேரில்
சந்திக்க வேண்டுமென்று..!

எழுதியவர் : காயத்ரிசேகர் (24-Dec-15, 9:37 pm)
Tanglish : santhippu
பார்வை : 104

மேலே