இனிக்கும் என் மொழி----------------நிஷா

நான் முகவரி தேடி
நடந்து போன நாட்களில்....
என் முகவரியாய்
எனக்குள் வந்தவன் நீ.....

நான் அன்பைத் தேடி
அலுத்துப் போன நாட்களில். ..
என் உயிரின் ஆதாரமாய்
எனக்குள் வந்தவன் நீ. ....

எங்கிருந்து வந்தாயோ...
தோணாத வார்த்தைகளுக்கெல்லாம்
விளக்கம் தந்தவன் நீ....

காணாத காட்சியெல்லாம்
கவிதையாக்கி தந்தவன் நீ....

உனைப் பற்றி
எழுத நினைக்கையில்
என் தாய்மொழியும்
இனிக்கிறது....
என் தவிப்பும்
இரட்டிப்பாகிறது..

நிஷா

எழுதியவர் : நிஷா (26-Dec-15, 11:33 am)
பார்வை : 310

மேலே