சுனாமி 2004 - கண்ணீர் அஞ்சலி

ஆழிக்கும் ஆசையோ என்னவோ
உலகையே ஆள
கரையோரம் கொஞ்சி விளையாடிய
அலைகள் அன்று மிஞ்சி
விளையாடி விட்டது

பூவோ, கனியோ, காயோ, பழமோ
மனித உடல்கள் இரையாகி போகின அன்று

துயில் எழுந்த காலையில்
நிரந்தரமாய் துயில் கொள்ளவே
செய்திட்டது பல உயிர்களை

தாயின் மடி கருவறை என்று எண்ணியோர்க்கு
அது கல்லறையானது அன்று தான்

துயர் நாள் யென சிலர் தற்சமயம்
கரம் நீட்டி துடைத்தாலும்
ஆண்டொன்று வரும் இந்நாளில்
துயர் தரும் நினைவலைகளின் அதிர்வலைகள்
இதய துவரமெங்கும் தழும்பின் விளிப்புகள் ..

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (26-Dec-15, 9:59 pm)
பார்வை : 624

மேலே