கண் மூடினாலும் நீ தானே

கண்ணை மூடிக் கொண்டு
கண்டுவிட்டேன் உன்னை என்று
என் மனம் தான் தாவிக் குதிக்கிறது
ஆனால் கண்ணைத் திறந்து காணும் போதோ
காணாமல் சென்றுவிட்டாய் அப்பொழுதுதான்
அறிந்து கொண்டேன் கண்டெதெல்லாம் கனவென்று.

காண்பதெல்லாம் நீயே கண்டதெல்லாம் நீயே
கண்களாய் நீ இருந்தாய் உன் பார்வையாய் எனை அணைக்க

பிம்பமாக நானிருந்தேன் உன் கண்ணில் நீ எனை சிறையமைக்க
ஆயுள் தண்டனையோன்றை கொடுப்பாயா
உன் கண் சிறையில் காலமெல்லாம் அடைபட்டிருக்க
உன் கண்ணிமை கதவினால் என் பிம்பம் தான் அடைப்பாயோ
உன்னுள்ளே என்னிதயம் தான் காப்பாயோ

என் கண் காணாத பொக்கிசமே
நீதானே என் கண் மணியே
பத்திரமாய் உனை அணைத்து வைப்பேனே
என் கண்ணுக்குள்ளே என்றும் நிரந்தரமாய்
என் வாழ்வின் தேவதையாய்

எழுதியவர் : சதீஷ் குமார் (29-Dec-15, 11:48 pm)
பார்வை : 129

மேலே