இவனது சுவடுகள்-4

எல்லோரும் உன்னை
வழிபடவே வந்தனர்
அன்று !.......

இவனோ !!.........

இரவில் உழைத்து விட்டு
பகலில் படித்து விட்டு
உறங்கவே இடமின்றி
உன் ஆலயம்
நோக்கி வந்தானே......

விழித்துப் பார்க்கையில்
நாணயங்கள் கண்டதும்
கற்கை நன்றே ! கற்கை நன்றே !!
பிச்சை புகினும் கற்கை நன்றே !!!
என்றவர் வாக்கு நினைவில் வரவே
வேண்டாத பிச்சையை
வேண்டியே உந்தன்
காணிக்கையாய் போட்டானே.......

இறுதிவரை நிம்மதியாய்
உறங்க உந்தன் ஆலயம்
ஒன்றே போதுமென்றே
வாழ்ந்தவன் இன்று
எப்படி மறவான் இந்த
பிரகதீஸ்வரர் ஆலயம்தன்னை
இவனது சுவடுகளில் இருந்து !...........

*****************தஞ்சை குணா*************

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 5:46 pm)
பார்வை : 58

மேலே