பசலை நோய்

உனக்காக நான் இருப்பேன்
என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில்
எனக்காக நீ இருந்தால்
என்னுலகம் முழுதும் உன் காலடியில்

வந்து போன உந்தன் நினைவில்
வெந்து போகுது எந்தன் இதயம்

நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன்
இல்லை என்றானால் மண்ணில் புதைவேன்

உனது முகம் பார்க்கவே
காத்து இருந்தேன்
காத்து இருந்தேன்
நீ எங்கே எங்கே எங்கே?

நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே
நீ பேசிய மௌனம் என் இதயம் கிழிக்குதே
மொழியால் விழியால்
நீ என்னை வருத்தவே
காயங்கள் போதுமே
கனவுகள் வலிக்குதே
விழிகளின் வழியிலே என்னுதிரம் வடியுதே!

ஒன்றும் அறியாது இருந்தவள் நான்
என் மனதினுள் நுழைந்து போதித்தாய்!
நீயே என் வாழ்க்கை என்றானதுமே
எனை விட்டு வெளியேறி சோதித்தாய்!
உடன் யாருமில்லா இப்பயணத்தில்
படகை செலுத்துகிறேன் நான் தனியாய்!
கரையை சேருமோ என் பயணம்?
வரும் வழிகள் நெடுகிலும் பேராபத்தாய்!

எழுதியவர் : தங்கராஜா பழனி (5-Jan-16, 5:29 pm)
Tanglish : pasalai noy
பார்வை : 675

மேலே