புதுமைப் பொங்கல் கவிஞர் இரா இரவி

புதுமைப் பொங்கல்

கவிஞர் இரா. இரவி

*****

மூடநம்பிக்கைகள் என்ற பழையன கழித்து
பகுத்தறிவு கொண்டு புதுமைப்பொங்கல் படைப்போம்.


எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேட்போம்
எதையும் ஆராய்ந்த பின்னே ஏற்றிடுவோம்


ராசிபலன் சோதிடங்களுக்கு முடிவு கட்டுவோம்
வாஸ்துபலன் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்


தெற்கே சூலம் வடக்கே சூலம் வேண்டாம் நமக்கு
எத்திசையும் நல்ல திசையே பயணிப்போம்


எமகண்டம் இராகு காலம் பார்ப்பதில்லை
எல்லா நேரமும் நல்ல நேரமே செயல்புரிவோம்


சகுனம் பார்ப்பதில்லை என முடிவெடுப்போம்
சிந்தித்து செயல்பட்டு சிகரம் தொடுவோம்


பூசணிக்காயை வீணாய் வீதியில் உடைக்காதிருப்போம்
பூசணியை சமைத்து காயாக உண்டிடுவோம்


திருஷ்டி என்ற பெயரில் தீ கொளுத்தாதிருப்போம்
தெருவில் தீ வைத்து தீ விபத்துக்கு காரணமாகாதிருப்போம்


சோதிடம் என்ற பெயரில் பணவிரயம் வேண்டாம்
சிந்தனையை பகுத்தறிவிற்கு நாளும் பயன்படுத்திடுவோம்


சாதி மதச் சண்டைகளுக்கு முடிவுரை எழுதிடுவோம்
சகோதர உணர்விற்கு முன்னுரை எழுதிடுவோம்


மனித நேயத்திற்கு என்றும் முன்னுரிமை தந்திடுவோம்
மனிதனை மனிதன் என்றும் நேசிக்கக் கற்றிடுவோம்


தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமையாகாதிருப்போம்
தொல்லைக்காட்சியாகி விட்ட தொடர்களைத் தள்ளி வைப்போம்


நடிகரை தலையில் வைத்து கூத்தாடாமல் இருப்போம்
நடிகரையும் சக மனிதனாகவே மதித்திடுவோம்


குடி கெடுக்கும் குடிக்கு அடிமையாகாதிருப்போம்
குடியில் விழுந்தோரை போத்தித்துத் திருத்திடுவோம்


அமைதியான வாழ்விற்கு உறுதி தருவோம்
ஆர்ப்பாட்டங்களை விடுத்து எளிமையை கடைபிடிப்போம்


புதுமைபொங்கல் பொங்கிடுவோம் வாருங்கள்
புத்துணர்வு பிறக்கும் புதுவழி திறக்கும்.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-Jan-16, 7:22 pm)
பார்வை : 69

மேலே