ரோஜா

விழி வீச்சில் என்னை
சிறைப் பிடித்து
இதயக்கூண்டுக்குள்
அடைத்து விட்டாய்.

உன் புன்னகை சிந்திய
இடமெல்லாம்
ரோஜாக்கள் பூக்கிறது.

புரிந்து கொண்டேன்
புஸ்ப்பமே!
உன் காதல் மேட்டில்
நான்
கைதியாக இல்லை
காவலாக உள்ளேனென்று.

நீயும் தீவிரவாதிதான்
அதனால்தான் என்னவோ
உன்மேல் எனக்கும்
தீராத வியாதி.

எழுதியவர் : மாரி சிவா (14-Jan-16, 1:29 pm)
Tanglish : roja
பார்வை : 77

மேலே