காதலில் ஜெயம்

வாசித்தேன் கவிதையாய்
சுவாசித்தேன் பெருமூச்சாய்
நேசித்தேன் கவிதையாய்
பூசித்தேன் பொறுமையாய்
புரிந்தேன் காதலை

போற்றினேன் பொக்கிஷமாய்
மீட்டினேன் வீணையாய்
ரசித்தேன் நாதமாய்
தொலைந்தேன் ராகமாய்
தெரிந்தேன் காதலை

உதிர்த்தேன் எண்ணங்களாய்
தொடுத்தேன் வண்ணங்களாய்
விடுத்தேன் தூதுக்களாய்
பெற்றேன் தேவதையாய்
கொண்டேன் காதலை

நினைத்தேன் இன்பமதாய்
அலைந்தேன் அவளிடமாய்
மலைத்தேன் யோகமதாய்
பூரித்தேன் நிச்சமாய்
அணைத்தேன் காதலை

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Jan-16, 9:21 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 103

மேலே