போதி நிழல் - உதயா

எத்தகை
வெளிப்பாட்டிலும்
உணர்த்தலென்பது
யாவர் நிலையிலும்
அனைத்து புறத்திலும்
துளிர்விடுமாயின்
அங்கொரு அமைதி
விதைக்கப்படுகிறது

யாதொன்றும்
எத்துனை சமயத்திலும்
புரிதலில் அலசப்பட்டால்
முற்றென்பது தீர்வாகிவிடும்

உணர்ச்சி வசத்தில்
சிறகுகள் முளைத்தாலும்
மையப்புள்ளிதனில்
சிந்தனை சீறுமானால்
நிரந்தரத்திற்குள்
நிம்மதி மட்டும்
நிறைந்துக் கொள்ளும்

ஓர் தனிமைச் சூழலில்
உனது எண்ணங்கள்
உன் மனவோட்ட ஏடுகளை
ஆராயுமானால்
புத்தக் குழந்தை
உன் மனதில்
கருத்தறிக்க கூடும்

தேவைகளின் பட்டியல்
சிலரின் குமுறல்களில் அணிவகுத்து
சிலரின் புன்முறுவலில் அழிந்து
மீண்டும் சிலரின் தேவைக்காகவே
நீண்டுக்கொள்ளுமாயின்
நீயும் அமரனாவாய்
அச்சிலரின் நினைவுகளுக்குள்

வாழ்க்கை என்பது
விருட்சமாய் அல்லாமல்
விழுதாக இருந்துவிட்டு போகுமானால்
நாளைய விருட்சங்களுக்கு
உன் வாழ்க்கை
விழுதுகள் அளிக்க நேரிடும்

- உதயா

எழுதியவர் : உதயா (29-Jan-16, 5:40 pm)
பார்வை : 97

மேலே