31-01-2016-மூடிக் கிடக்கும் உளம்
மூடிக் கிடக்கும் உளம்..!----எசேக்கியல் காளியப்பன்.
ஓடித் தியாகையர்
பொருள்தேடிக் கலம்,ஏற
ஊடிப் பசலை,என்
உடலெல்லாம் தான்,கூடக்
கோடி நாவுகளும்
கொடியிலைகள் போல்,பேசச்
சூடக் கொடுத்தமலர்
சோபையினைத் தானிழக்க
ஓடுமணிச் சுவர்க்கோழி
உச்உச்சுத் தான்கொட்ட
பாடிச் சிவன்,உமையைப்
பக்தரெலாம் தூக்கிவர
மூடிக் கிடக்குதடீ
முன்வாசல் என்,உளம்போல்!
======== ===========