05-02-2016 குறள் தந்த சிந்தனை

'ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்'அதனால் - பார்க்கும்
இலவசங்க ளால்,உன் எதிர்காலம் நல்ல
பல,இழக்க நேரலாம் பார்!---------------------------------------------------------------------------------------------------------------------(01)

'நெய்யால் எரிநுதுப்பேம் என்றாற்றல் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்'அதுபோல் - யாமும்
மது,பிரி யாணி மயக்கினோர் கொண்டு
மதுவாட்சி மாற்றும் முனைப்பு!-------------------------------------------------------------------------------------------------------------(02)

'கல்லா தவரின் கடையென்ப , கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்'இன்றோ - எல்லோரும்
வாய்க்கும் பொருளெண்ணி வாய்பொத்தி நிற்கின்றார்
ஏய்க்கும் இவர்மக்க ளை! --------------------------------------------------------------------------------------------------------------------(03)

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (5-Feb-16, 9:42 pm)
பார்வை : 60

மேலே