தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து15---ப்ரியா
கீது வந்தனாவுக்கு கால்பண்ணி கால்பண்ணி போர் அடித்துப்போனாள் அவள் இவளுடைய அழைப்பை ஏற்கவில்லை கோவத்தில் இருந்த கீது விஜயிடம் திருவிழாவுக்கு இருவரையும் கண்டிப்பாக அழைக்கணும் ஆனால் இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு இருவரும் ஏதாவது காரணம் சொல்லி வராமல் இருந்து விடுவார்கள் அதனால் அவர்கள் இருவரையும் எப்படி இங்கு அழைப்பது என்று ஐடியா கேட்டாள்..?
"வெரி சிம்பிள்" என்றவன் தனது மனதில் தோன்றியதை சொன்னான் கீதுவுக்கும் அது சரி எனப்பட்டது.........
வசந்தும் ரியாவும் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்....எங்க வீட்டுக்கு வந்துட்டு கிளம்புறீங்களா?இதுல பக்கம்தான் என்று வசந்த் கேட்க?இல்ல சார் இனி ஒருநாள் வரேன் என்ன எங்க தெருவுல இறக்கி விட்டிருங்க சார்......நான் நாளைக்கு வந்தா போதுமா?என்று கேட்டாள்..?
இல்ல ரியா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு உடனே கிளம்பி வாங்க வேலை இருக்குது ஹெட் ஆபீசெர்க்கு இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து தகவல்களையும் அனுப்பணும்......இந்த வேலைய நாம ரெண்டு பேரும்தான் பார்க்கணும் அதனால 2மணிக்க முன்னால வந்திருங்க என்று சொல்லி அவளுடைய வீட்டு வாசலில் இறக்கி விட்டான்...!
திடீரென வெளியில் வந்த வந்தனா காரை பார்த்ததும் உள்ளே சென்று விட்டாள்,சரி சார் நான் வரேன் என்று சொன்னவள் நல்ல வேளை வந்தனாவை பார்க்கவில்லை என்று சந்தோஷப்பட்டாள்...
ஓடி வந்து வந்தனாவை கட்டிக்கொண்டாள்..... ஏன்டி நீ கீது கூட போகல போயிருந்தா அவளோட வருங்கால கணவரையும் பார்த்துக்கலாம்....நாம அவகூட இல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டா, நீ வேற பேசலன்னு ரொம்ப கோவத்துல இருக்கா?என்று பேசிக்கொண்டிருந்தாள் ரியா...??
அத விடுடி நம்ம ப்ரண்டு தானே அப்புறம் பார்த்துக்கலாம் நம்ம ப்ளேன் என்ன ஆச்சி ஏதாவது முடிவு பண்ணுனியா?என்று கேட்டாள் வந்தனா?
அதாண்டி யோசிக்கிறேன் கீதுவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்னிடம் நிறைய நேரம் பேசினார் அவர்தான் நான் வந்து நேரடியா டீல் பண்றேன் நீங்க பெண்கள் தேவை இல்லாம இதுல இறங்கவேண்டாம் அது பெரிய பிரச்சனைல கொண்டு விட்டிரும் என்று சொல்லிருக்காங்க அதனால எனக்கும் அதுதான் சரின்னு படுது....என்று ரியா சொல்ல..!
வந்தனாவுக்கு கோவம் தலைக்கேறியது, நீ இப்போ என்ன சொல்ல வர்ற நான் சொல்றேன் நாம்தான் நம்ம பிரச்சனைய தீர்த்துக்கணும் ஆண்களுக்குள்ளால பேசினா வாக்குவாதம் முற்றி பெரிய பிரச்சனைதான் வரும் இதுல அவன தேவை இல்லாம இழுக்க வேண்டாம் அதுவுமில்லாம விஜய்க்கு வசந்தை பற்றி என்ன தெரியும்?என்று கேட்டாள் வந்தனா...?
எனக்கு எல்லாம் தெரியும் என்று பதில் வர..பதில் வந்த திசையை திரும்பி பார்த்தனர் இருவரும்.........என்ன அதிசயம்! கீதுவும் விஜய்-யும் ஜோடியாக வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
மகிழ்ச்சியில் ரியாவும் வந்தனாவும் அவளை கட்டிக்கொண்டனர்.
போடி நீ பேசாதே என்று வந்தனாவைப்பார்த்து செல்லமாய் கோவப்பட்டாள் கீது.......நான் எவ்ளோ கூப்பிட்டேன் என்கூட வரல அதுமட்டுமா எத்தனை முறை கால் பண்ணினேன் பேசுனியா?என்று வந்தனாவை பொய்யாய் கோவித்துக்கொண்டாள்......!
சரி!சரி நான் ஒருத்தன் இங்க இருக்கிறதை மறந்திடாதீங்க உங்க சண்டைய அப்புறம் வச்சிக்கோங்க............. வந்த விஷயத்தை தவிர வேற எல்லாத்தையும் பேசு என்று அதிகாரக்குரலில் சொன்னான் விஜய்...!
ஐயோ மறந்துட்டேன் இன்னிக்கு ஈவ்னிங் நாம எல்லாரும் என் ஊருக்கு செல்லப்போகிறோம் என்று புன்னகையுடன் சொன்னாள் கீது.
இன்னிக்கா?என்று ரியா அதிர்ச்சியாய் கேட்டாள், வந்தனாவும் அதே நிலைமைதான்......
இன்னிக்கு சான்சே இல்ல என்று ரியா சொன்னதுதான் தாமதம்......டிக்கெட் ரெடி இந்தாங்க.....சரியா 6.30க்கு பஸ்.., ரெடியா இருங்க அதற்குள் நானும் இவரும் என் கம்பெனி வரைக்கும் போயிட்டு வரோம் என்று சொல்லி விட்டு இவர்களின் பதிலையும் எதிர் பார்க்காமல் கிளம்ப தயாரானாள் கீது.............
ராமுக்கு எப்டி வசந்தைப்பற்றி தெரியும் என்று வந்தனா கேட்டாள்..?
ஓ! அதுவா உன் டையரிய தெரியாம ஊருக்கு எடுத்துட்டு போனேன் அதுல வசந்த் போட்டோ இருந்திச்சி அத பார்த்ததுமே ராம் வசந்தைப்பற்றி பிட்டு பிட்டு வச்சிட்டாரு.........அதான் ரியாவை கவனமாக இருக்க சொன்னேன் எல்லாம் என் ஆளு பார்த்துப்பாரு கவலைப்படாதீங்க சரியா என்று நம்பிக்கைக்கொடுத்தாள் கீது........போட்டோவா?என்று கேட்டுவிட்டு வந்தனா முகம் மாறினதை மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை ஆனால் விஜய் கவனிக்க தவறவும் இல்லை....!
விஜயும் கீதுவும் கிளம்பிவிட்டனர்.
ரியா கிளம்பிக்கிட்டிருந்தாள் என்னடி எங்க கிளம்புற?என்று வந்தனா கேட்டாள்...??
நான் உடனே கிளம்பணும்டி அந்த அக்ரீமென்ட் கம்பெனி மற்றும் புது டிசைன் வொர்க்ஸ் பற்றிய தகவலெல்லாம் சரிப்பண்ணி அவங்களுக்கு அனுப்பணுமாம் வெளிநாடு என்பதால் 2நாட்களில் எல்லாம் ரெடி பண்ண சொல்லிருக்காங்க நான் போய் தான் டைப் பண்ணி ரைட் பண்ணி கொடுக்கணும்........என்று ரியா சொன்னதும் வந்தனாவுக்கு ஒரு யோசனை தோன்றியது...!
ஹேய் நம்ம பிளேன் ஒர்க் அவுட் ஆகணும்னா ஒரு ஐடியா இருக்குது நீ அவன் கூட பண்ற எல்லா ரகசியங்களையும் எனக்கு அந்தநேரமே மெயில் பண்ணிடு அப்புறம் எல்லாமே வரும் போது முடிஞ்சா அவனுக்கு தெரியாம ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கோ......அப்புறம் அவனோட ஒரு கையெழுத்து அவ்ளோதான் அப்புறம் பாரு அவனோட தலையெழுத்தே மாறப்போகுது என்று கடுமையான குரலில் பேசிக்கொண்டிருந்தாள்.....வந்தனா....???
அதில்லடி விஜய்..........என்று இழுத்தாள் ரியா.....?
தொடரும்........!