சிநேகிதனே - ஆனந்தி

இது கவிதை அல்ல
அழகு உன்னை எழுதுவதால் ...........
------------------------------------------------------

எத்தனை முறை
வேண்டுமானாலும், வாசிப்பேன்
இரண்டெழுத்து கஸல் - உன் பெயர்
-------------------------------------------------------

நீ இல்லா நாட்களில் பூக்களிடம்
பேசி கொள்ள(ல்ல)வா?
-------------------------------------------------------

மழலை அழகு தான் உன்னை
பார்க்காதவர்களுக்கு
-------------------------------------------------------

காட்சி பிழைகளா
அருகே பகல் பௌர்ணமி
நீ
-------------------------------------------------------

சித்திரம் வரைய சொல்கிறார்கள்
நானோ உன்னை,
வரைந்து முடிக்கிறேன்
-------------------------------------------------------

பேட்ரி தீர்ந்த சுவர் கடிகாரமும்
நேரத்தை சரிபார்க்கிறது
உன் வருகையை எதிர்நோக்கி
-------------------------------------------------------

கொலை கத்தி முனையில்
நிறுத்தப் பட்டிருக்கிறேன்
சலனமில்லை எனக்குள்
நீ ஒற்றை பார்வை
வீசி சென்றதாலா??
-------------------------------------------------------

நீயோ என்னை அலட்சியம்
செய்கிறாய்
நானோ உன்னையே
லட்சியம் செய்கிறேன்
-------------------------------------------------------

எழுதியவர் : ஆனந்தி . ரா (10-Feb-16, 2:45 pm)
பார்வை : 134

மேலே