உன்னை காணாமல் தவிக்கிறேன் இன்று 555

உயிரே...

ஊருக்கு வெளியில்
கிடக்கும் பாறையை போல்...

யாருக்கும் பயனில்லாமல்
நான் இருந்தேன்...

உன் விழிகள் என்னும் உளிகொண்டு
என்னை செதுக்கினாய்...

நீ சிற்ப்பமாக்கினாய் என்னை
வெறுத்தவர்கள் மதித்தார்கள்...

மூங்கில் காட்டில் ஆயிரகணக்கான
மூங்கில்கள் இருந்தாலும்...

நான் தனி மூங்கிலாய்
நின்று இருந்தேன்...

என்னை உன் பூ விரல்களால்
புல்லாங்குழலாக்கினாய்...

சிதறிய கூழாங்கல்லாய்
நான் இருந்தேன்...

உன் கன்னம் பட்டு
வைரமாக்கினாய்...

சிதறி கிடக்கும்
எழுத்துகளை ஒன்றாக்கி...

கவி எழுத எனக்குள் கற்பனை
விதையை விதைத்தாய்...

துடுப்பின்றி வாழ்க்கை என்னும்
ஆற்றுவெள்ளத்தில் தவித்த என்னை...

துடுப்பாக வந்து
கரைசேர்த்தாய் வாழ்வில்...

தினம் தினம் எனக்காக
நீ கொடுத்து செல்லும்...

உன் புன்னகைக்காக
நான் தவம் இருக்கிறேன்...

காதலர் தினமாம் இன்று...

உன்னை காணாமல் தவிக்கிறேன்
அரேபிய மண்ணில் நின்று...

என் உயிரானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Feb-16, 8:24 pm)
பார்வை : 680

மேலே