அவளுக்காக
நீ.... மட்டும்
என்னுடன் வருகிறேன் என்று சொல்
வானவில்லின் நிறங்களை
நீ... கோலம் போட எடுத்து வருகிறேன்
மேகத்தையும் கனநேரத்தில்
நீ... உறங்க பஞ்சுமேத்தை ஆக்குகிறேன்
கதிரவனையும் இமைக்கும்நேரத்தில்
நீ... குளிர் காய கட்டி இழுத்து வருகிறேன்
திங்களையும் நம் குழந்தைகள்
விளையாட நூல் பிடித்து வருகிறேன்
வரமுடியாது என்று மட்டும்
சொல்லிவிடாதே!!!
கண்ணீருடன் கல்லறை சென்று
விடுவேன்