தனிமையைத் தேடி

தனிமையைத் தேடி!!!
கடற்கரை சென்றேன்!!!
அலைகள் அரவனைத்தன!!!
காடுகள் சென்றேன்!!!
பறவைகள் நலம் விசாரித்தன!!!
மண்ணை பார்தேன்!!!
விதைகள் கைக்கொடுத்தன!!!
விண்ணை பார்த்தேன்!!!
நட்சத்திரங்கள் கண் இமைத்தன!!!
தினம் பச்சிலங்குழந்தைகள் தத்தித்தவழ்கின்றன!!!
தளிரெனும் பெயரோடு செடிகளில்!!!
எப்படி சொல்லிட முடியும் நம் உலகை???
வெறும் அழகென ஒற்றைப்பதத்தில்!!!

எழுதியவர் : கவிஞன் உளி (19-Feb-16, 11:37 am)
சேர்த்தது : அய்யம் பெருமாள்
Tanglish : thanimaiyaith thedi
பார்வை : 81

மேலே