குறும்பா -வெள்ளம் 01

கூட்டிய வெள்ளாமை
காட்டிய மகிழ்ச்சி
பொங்கல்!
**
வாட்டிய துயர்கள்
மூட்டிய தீயில்
போகி!
**
கொடுப்பது மகிழ்ச்சி
கிடைப்பது மலர்ச்சி
வசந்தம்!
**
அடிக்கும் வெயிலுக்குக்
கொடுக்கும் குடை
மரம்!
**
சிக்கலில் அழகு
சிந்தனையுள் தெளிவு
கோலம்!
***
தன்மகனே என்றாலும்
தாய்ப்பாலும் விற்பனைக்கே
அம்மா குடி நீர்!
**
பூமித்தாய்ப் பாலை
புட்டிகளில் விற்பாயோ?
வெள்ளம்!
**
குடிசைகளுக் கிடையே
கோபுரங்கள் கட்டினோம்
அலைபேசிகளுக்கு!
***
நிலங்களை விற்போம்
புலங்கடந்து உழைப்போம்!
வாழ்க தாய்மண்!
***
வாயுக் குழாய் பதித்து
வரிகொடுக்கப் போவோமோ?
எரிகிறான் விவசாயி!
***
வரிகொடுக்கா முதியவரின்
வாழ்க்கைப் பதிவுகள்
சுருக்கெழுத்தாய் முகத்தில்!
***

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (19-Feb-16, 8:31 pm)
பார்வை : 111

மேலே