பறக்கிறாய் படகில்
பறக்கிறாய் படகில்!
உன்னைக் கண்டு
விமானம் படைத்தார்கள்
நீ சுமந்து போகும்
மீனைக் கண்டு
படகினைப் படைத்தார்கள்
ஆனால்…… நீ
படகில் அல்லவா
பறக்கிறாய் வானத்திலே!
இந்த சாத்தியம்
உனக்குத்தானோ ?
--- கே. அசோகன்.