22-02-2016 வெள்ளம் பேசினால்

கட்டிப் போட்டதும் நீங்களே!
கரைகளை இரவில்
வெட்டிப்போட்டதும் நீங்களே!
கழிவுகளை எனக்குள்
கொட்டிப்போட்டதும் நீங்களே!
தாய்வீட்டை நானும்
எட்டிப் பார்த்ததில் தவறா?
**
அடுத்தவர்க்குக் கொடுக்காமல்
தடுப்பவர்கள் நீங்களே!
கொடுத்தவராம் காடுகளைக்
கெடுத்தவரும் நீங்களே!
படித்ததெலாம் நீர்மேல்
விடுத்தவர்களும் நீங்களே!
வெடித்த,என் வான்,அப்பன்
வீடழைத்தது ஒருதவறா?
**

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (22-Feb-16, 8:00 am)
பார்வை : 101

மேலே