உலகின் உயிரோவியம் பெண்கள் 555

பெண்ணோவியம்...

பெற்றவளுக்கு பெண்ணாக
பிறந்தவள் மகளாகிறாள்...

மணமாலை சூடியதும்
ஒருவனுக்கு மனைவியாகிறாள்...

தம்பி தங்கையோடு பிறந்ததால்
தமக்கையாகிறாள்...

கன்னி வயதில் காதலை சுமப்பதால்
காதலியாகிறாள்...

மழலையை ஈன்றபின்
தாய்மையாகிறாள்...

வேர்கள் இல்லாமல்
விழுதுகள் எப்படி மண்ணில்...

விதைகள் இல்லாமல்
மரங்கள் எப்படி காடுகளில்...

பெண்களில்லாமல் மானிடர்கள்
பிறப்பது எப்படி...

பெண்கள் ஒரு காவியம் என்றால்
பிழையேதும் இல்லை நம்மில்...

உலகின் உயிரோவியம் பெண்கள்.....

[அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்]

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Mar-16, 7:54 pm)
பார்வை : 3465

மேலே