அம்மா எப்படி இருக்காங்க
மனைவி தன் கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர் சென்றிருந்தாள். போகும்போது அவனிடம் தன செல்லப் பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி விசாரித்தாள். "இன்னிக்கு காலையில உன் பூனை மாடியிலருந்து விழுந்து செத்துப் போச்சு" என்றான் கணவன். அழுது புலம்பிய மனைவி, எப்படி நீங்க இவ்ளோ பெரிய சோகத்தை சாதாரணமா சொல்லலாம்.
இன்னிக்கு "பூனை மொட்டை மாடியிலே விளையாடுதுன்னு சொல்லி இருக்கணும்".
நாளைக்கு நான் போன் பண்ணும்போது " கால் தவறி பூனை மாடியிலேருந்து விழுந்துடுச்சு"ன்னு சொல்லணும்.
அதுக்கு அடுத்த நாள் "அடி பலமா பட்டதாலே பூனை செத்து போச்சுன்னு சொல்லணும் ".
அப்போ தான் என்னாலே தாங்கிக்க முடியும் இப்படி போட்டு சாகடிச்சிட்டிங்களே?"
"சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க "?
.
.
.
.
.
"மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க...