தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 2 - 34

“மலையில் பூக்கும் மலரே ! குறிஞ்சி மலரே !
நீ மலர; பன்னிரெண்டு ஆண்டுகள் எதற்கு... ?”

“பிரம்மன் செய்த சதியோ..? ஈதுன் விதியோ..?
விரைந்து எடுத்துச் சொல் நீ எனக்கு... !”


காய்க்காத பூக்களுக்கு ஒருநாள் திருநாள்
பூ – தானாக மரித்துவிடும் மறுநாள்

காய்க்கும் பூக்களுக்கு ஆறுநாள் திருநாள்
காய் தானாக பழுத்து விழும் ஒருநாள்

குறிஞ்சி மலரே இதிலிருந்து உனக்கேன் விதிவிலக்கு...?
உன்னை படைத்த பிரம்மன்மேல் நீ போடு ஒருவழக்கு..!

மனிதனும் உன்னை போல பிறந்தால்
மண்ணில் வறுமை என்பது இல்லை...!

அவன் ஆண்டுக்கு பல்லாயிரம் பிறப்பதால்
அகிலத்தில் வறுமை பேய்களின் தொல்லை !

குறிஞ்சி மலரே வரம் கொடு
எங்கள் மனிதர்கள் திருந்திட..!

திருந்தாத மனிதர்களை..
நீ வந்து திருத்திடு...!

எழுதியவர் : சாய்மாறன் (14-Mar-16, 7:38 am)
பார்வை : 81

மேலே