விழிகளில் கானல் நீர்

என்னவளின் விழிகள்


அவள் விழி பேசும் மோழி.

பேசா!!! மௌனம்

மழைத்துளி தீட்டும் ஓவியம்

விடை கொடா!!! புதிர்

விளக்கில்லா ஒளி

எழுத்து இல்லா கவி

தீட்ட துடிக்கும் ஒவியம்

திசைகள் அறியா! காற்று

வலிகள் தாங்கும் சிற்பம்

விட்டு விட்டு தூரும் சாரல்

மெய் பேச துடிக்கும் மை

மொழிகள் அறியா! தேசம்

நதியில் பாயும் காகித படகு

வாழ துடிக்கும் காதல்

கரைகள் அற்ற கடல்

மீள துடிக்கும் உயிர்

இரவில் உதிக்கும் சூரியன்

பகலில் உலவும் நிலவு

எண்ணிடமுடியும் நட்சத்திரம்

மௌனம் பேசும் விழிகள்
மழையின் பரிபாடல் அது !!!

என்னவள் விழிகள் அது!!!

எழுதியவர் : சிவா (19-Mar-16, 12:30 am)
பார்வை : 865

மேலே