உப்புநீர்

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்.
*
கவிஞர் நீலமணின் கவிதை வரிகள்.
உப்புநீர்
கடலின் இயல்புதான்
ஒர் ஆயுதம் எப்படி
அழுகிறது?
துயிலும்போது
உள்நோக்கிக் கனவுகள்
கண்ணிலிருந்து
கரைகிறது உலகம்.
ஒன்று சொல்லியாக வேண்டும்
கண்ணீர்ப் பஞ்சம் மட்டும்
வரவே வராது.
மரணம் இனிது
உன் கொடை.
அழகானது தான்
உன் இரக்கமின்மை.
கண்களால் வாழ்க்கை
துன்ப மயம்.
காது வரை கண்
உன் தாராளமயத்தால் புண்.
அது சரி,
இரண்டு முற்றுப்புள்ளி எதற்கு?
ஆதாரம் : கவிதா மண்டலம் – மார்ச் – 2016 மாத இதழ் – பக்கம் 11.
தகவல் : ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Mar-16, 6:33 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 94

மேலே