இதயம் கொண்டு வாழ்ந்திடு

வெற்றியை மட்டுமே விளைவாய் எண்ணி
வாழ்க்கை வழியினை நடத்தாதே?
பற்றிடும் தோல்வியும் பாதையில் வரலாம்
பயந்துநீ ஒதுங்கிக் கிடக்காதே?
சுற்றமும் உன்னைச் சோதித்துப் பார்க்கும்
சோகத்தில் மூழ்கி ஒளியாதே?
குற்றமே கண்டு குறைகளைச் சொல்லினும்
காதினில் எதனையும் போடாதே?

காலினை இடரியே குப்புறத் தள்ளிடும்
வேலையும் கொண்டதே உலகம்
வேலினை ஏந்தியே வீரமாய் நடந்திடு
வீணர்கள் கொள்வார் கலக்கம்
கூலிக்கு நெசஞ்சினில் அடித்திங்கே அழுதிடும்
கூத்தினைக் கண்டு நீ தெளிந்திடு
போலிக்கும் இங்கே மகுடமே சூட்டுவார்
பொய்தனைத் தெரிந்துநீ விலகிடு.

உன்னை நம்பியே உலகினில் வாழ்ந்திடும்
உறுதியை நெஞ்சினில் கொண்டிடு
துன்பங்கள் தன்னைத் தூக்கித் தந்திடும்
சூதுகள் ஒழித்திங்கே வென்றிடு
நண்பனாய் வந்துன்னை வஞ்சகம் செய்திடும்
நரிகளின் கூட்டத்தை விரட்டிடு
புண்பட்டு துடித்திட என்றுமே நினைத்திடும்
பாவிகள் என்றால் துரத்திடு.

அன்பினால் என்றும் அணைத்திட வேண்டும்
ஆத்திரம் தன்னை விட்டிடு
கண்ணில் கருணைப் பொங்கிட வேண்டும்
கயமை தனையே ஓட்டிடு
மண்ணில் உந்தன் மகிமை பேச
மாண்புடன் என்றும் நடந்திடு
எண்ணித் துணிக கருமம் என்றே
இதயம் கொண்டு வாழ்ந்திடு.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (25-Mar-16, 7:22 pm)
பார்வை : 90

மேலே