சலாவு 55 கவிதைகள்

அன்பே நான் நலமா ..
என்னில் நீ சுகமே ..
உனை காண ஏங்கும் மனமே ..
தேடும் கண்களும் தினமே ..
மறுக்காமல் தந்துவிடு வரமே ..
வேண்டாம் இனி பிரிவு சாபமே ..
நீ பார்த்து செல்லும் கணமே ..
நின்று போனது சுவாசமே ..
உறங்க மறந்த கனவே ..
உயிர் தீண்டிய உறவே ..
உன் விளங்க முடியா இரவுகளில் ..
விடை தேடும் விடியல் நான் ..
தென்றலும் போடுது கும்மாளம் ..
தெம்மாங்கு பாடுது குயில்களும் ..
தெரியாமல் வந்துவிட்டாய் மனதினுள்ளே ..
வழி தெரியாமல் தவிக்கின்றான் பயபுள்ள ..
உனை காண துடிக்கின்றேன் ..
கற்பனையில் வாழ்கின்றேன் ..
என் காதல் மெய்தானா ..
உன் வாய் மொழியில் மௌனம் ஏன் ..
சொல்லவும் தெரியாது ..
சொன்னாலும் புரியாது ..
பார்வைகள் பரிமாறி ..
இதயங்கள் இணைந்த ..
நம் இருவரின் காதல் ..
...............
...................சலா

எழுதியவர் : (31-Mar-16, 1:33 pm)
பார்வை : 61

மேலே