காதல் சிறகெடுத்து சேர்வோம்நாம் விண் - நேரிசை வெண்பா
காஞ்சிபுரத்தில் வசிக்கும் அன்பு நண்பர் பேராசிரியர் டாக்டர் ஹரிபாபு அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த ரோசா மலரை முகநூலில் கண்டதும் என் மனதில் தோன்றிய வெண்பா
இரு விகற்ப நேரிசை வெண்பா
செவ்விதழ் ரோசாப்பூ செவ்வையாகப் பூத்திருக்கு
செவ்வியேர் மாலைப் பொழுதினிலே – தெவ்வம்
பறந்தோடும்! தேன்நிலவு பூத்துவிடும்! காதல்
சிறகெடுத்து சேர்வோம்நாம் விண்!
செவ்வியேர் – அழகு பொருந்தும், தெவ்வம் – தீவினை