கனவு என்னும் காட்சியில்

மனம் என்னும் ஊஞ்சலில்
மலர் ஒன்று ஆடுது
விழி என்னும் மாலையில்
கவிதை ஒன்று பாடுது
இதழ் என்னும் நீரோடையில்
கதை ஒன்று பேசுது
கனவு என்னும் காட்சியில்
தினம் என்னைக் கொல்லுது !
உறவு என்னும் நெஞ்சினில்
மௌனமாய் ஏதோ சொல்லுது !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Apr-16, 10:55 am)
பார்வை : 93

மேலே