சிவகாமியின் செல்வன்

யாருக்கும் அஞ்சாமல்

ஆட்சி செய்தவரே....

கல்விக்கண் திறந்த

காமராஜரே...



ஆண்ட பரம்பரைக்கும்

ஆட்சி செய்திட

அடித்தளம் அமைத்தவரே...



சிறுவயதிலே நண்பனின்

பசி தீர்த்தவரே....

தமிழகம் கண்ட

முத்தான திட்டத்திற்கு

முன்னோடியே ...



சிவகாமியின் செல்வனாய்

சீரும் சிறப்புமாய்

தமிழத்தில் வாழ்ந்த

கடைவள்ளலே....



உம்மை போல ஒருவர்

எங்களுக்கெல்லாம் தலைவராய்

வர வேண்டுமென்று ஏக்கம்

கொள்ள வைத்தவரே....



என்றும் எங்கள்

மனதில் வாழும்

கர்மவீரரே......

எழுதியவர் : கார்த்திக் மலர் (8-Apr-16, 11:25 am)
சேர்த்தது : கார்த்திக் மலர்
பார்வை : 1396

மேலே