எப்போதும் என்னிடத்தில்

எந்த மதத்தை ..
நான் அறிந்து விட்டேன்
முழுமையாக ..

எந்த இனத்திற்கு மட்டும் ..
நான் சொந்தம்
எல்லா விதங்களிலும் ..

எந்த நதியும், காற்றும், கடலும்
எனக்கு மட்டுமே சொந்தம்
எப்போதும்..

எந்த கரைகளில் வாழ்கின்றன
என் ஒவ்வொரு பிறவியின்
சொந்த பந்தங்கள்

எந்த ஆசைக்கோப்பை
மிச்சமுள்ளது என்னிடம்
முழுதும் பருகியதாய்

எந்த வழிகள்..பாதைகளில்
இன்னும் நான்
பயணிக்கவில்லை ..

எந்த கனவுகள் மாயங்கள்
அற்றதாய் இருந்தன
நான் கண்டதில்

எந்த திசையில் உள்ளது
எனது கரைதலை
ஏற்கும் கடல்..

முடிவற்ற கேள்விகள்
சர்க்கரைத் துண்டத்தை
சுற்றிய எறும்புகளின் சாரையாய்

எப்போதும் என்னிடத்தில் !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (9-Apr-16, 10:36 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : eppothum ennidathil
பார்வை : 85

மேலே