முகம் ஒன்று தான்

முகம் ஒன்று தான்
அதில் தான் என்ன
என்ன வெளிப்பாடுகள்.

புன்சிரிப்பிலே விரிந்து
பூவாக மலர்ந்து
பொலிவுடன் திகழும்.

கவலையிலே சோர்ந்து
கசங்கி வாடி
சோபையிழந்து தோன்றும்.


ஆச்சரியத்தில் வியந்து
பரவி ஒளி கூட்டி
கொள்ளாது விளங்கும் .


வெறுப்பில் வதங்கி
ஒடுங்கி ஒளி குறைந்து
குணங்கி சொடியும்.


அன்பில் மலர்ந்து
ததும்பி தடவி
கருணை வடிவாகத் திகழும் .


ஆத்திரத்திலே பொங்கி
வெடித்துச் சிதறி
ஆவேசத்தைக் காட்டும்.

முகம் ஒன்று தான்
அதில் தான் எவ்வளவு
கோடுகள் குறுக்கும்
நெடுக்குமாக.

எழுதியவர் : மீனா somasundaram (11-Apr-16, 6:50 pm)
Tanglish : mukam ondru thaan
பார்வை : 711

மேலே