மரியாதை உனக்குமுண்டு

மரியாதை
கல்விதனை கற்கவரும்
கலங்கமில்லா உள்ளங்களில்
கொண்டு சேர்க்க
குரு உபதேசிக்கும் வேத சொல்

பண்பாடு ஒருபக்கம்
பயம் மறுபக்கம்—இரண்டும்
கலந்த ஒரு மந்திரசொல்
வாழ்க்கை பயணத்திற்கு
உதவும் தந்திரசொல்

அறிவை புகட்டும்
ஆசிரியருக்கும், பெற்றோர்க்கும்
கைமாறாய் கொடுக்கும்
குழந்தைகளின் உண்மை
உணர்வின் வெளிப்பாடு

தந்தை சேர்த்த சொத்தை
தனயன் எடுத்து
ஊரு சனத்துக்குக் கொடுத்து மகிழும்
நல்ல உள்ளம் படைத்தவன்போல்
நீயும் இருப்பதால்

பகலவன்போல் விழித்திருக்கும்
பெற்றவரின் முன்
பயபக்தியால் வருவதை தவிற்கும்
நல்ல பிள்ளைகளைப்போல்
நீயும் இருப்பதால்

தந்தை உறங்கையிலே
தொந்தரவு செய்யக்கூடாதென
இரவில் வெளியேறி நட்புகளோடு
ஊர் சுற்றும் இளைஞர்கள்போல்
நீயும் இருப்பதால்

வானத்து சந்திரனே!
நீ சூரியனின் புத்திரனோ!
மண்ணில் வாழ் பிள்ளைகள்போல்
மரியாதை காப்பவனே—எங்களின்
மரியாதை உனக்குமுண்டு.

எழுதியவர் : கோ.கணபதி (14-Apr-16, 10:16 am)
பார்வை : 88

மேலே