உன் நினைவின்றி வாழாது என் ஜீவனடி 555
என்னவளே...
நீ பேசும் மொழிகள் எல்லாம்
எனக்குள் மௌனம்தாண்டி...
உன் கடும் சொல்லுக்கு
நான் பதில் சொல்லாததால்...
நீ விருப்பமில்லாமல் பேசியதை
எளிதில் மறக்க முடியுமா...
கிணற்றில் நீந்துவதற்கு
கற்று கொடுத்தான் நண்பன்...
உன் நினைவுகளில்
நீந்துவதற்கும்...
உன் நினைவுகளில்
மூழ்குவதற்கும்...
உன் காதலும் என் கண்ணீரும்தான்
கற்று கொடுத்தது எனக்கு...
என் நினைவுகள் உன்னை
சுற்றியே இருப்பதால்...
எனக்கு நீதானடி
என் உலகம்...
நீரின்றி அமையாது
உலகம் என்றார்கள்...
உன் நினைவின்றி
வாழாது என் ஜீவனடி.....